தென்பகுதில இருக்க ஒரு அழகான ரம்மியமான கிராமம்.. எப்பவுமே பச்ச பசேல்-னு கண்ணுக்கு குளிர்ச்சி தர மாறி இருக்கும் அந்த கிராமம்(THE பல்லே லக்கா VILLAGE).. அந்தகிராமத்துல தான் சரஸ்வதியோட வீடு இருக்கு.. சரஸ்வதி 10th படிக்கறா.. அந்த கிராமத்துலயே ஒரு GOVT ஸ்கூல்-ல.. ரொம்ப கெட்டிக்கார பொண்ணு.. அப்பா இல்ல.. அம்மா ரொம்பகஷ்ட பட்டு படிக்க வெக்கறாங்க..
அவள பாத்தாலே அவ்ளோ மங்களகரமா இருப்பா.. சின்ன வயசுல இருந்தே அந்த கிராமத்துல இருந்ததால அங்க இருக்க எல்லாரையும் அவளுக்கு தெரியும்.. நல்லா படிச்சிட்டுஇருந்தா.. ஆனா யார் கண்ணு பட்டுச்சோ கொஞ்ச நாளா அவ போக்கே சரி இல்ல.. திடீர் திடீர்-னு ஏதோ வித்யாசமா நடந்துக்க ஆரம்பிச்சா.. சும்மாவே கத்துவா.. அழுவா.. ஐயோவேணாம் வேணாம்-னு பொலம்புவா.. அவங்க அம்மாவுக்கு ரொம்ப பயம் ஆயிடிச்சி.. என்ன பண்றதுனே தெரில..
அதே கிராமத்துல இருக்க ஒரு கோடாங்கி(EXORCIST) கிட்ட கூட்டிட்டு போனாங்க.. அந்த கோடாங்கி ரொம்ப FAMOUS..
'ஏதோ பேய் புடிச்ச மாறி இருக்கா சாமி.. ரொம்ப பயமா இருக்கு..' அப்டி னு அந்த கோடாங்கி கிட்ட சொன்னாங்க.. அந்த கோடாங்கி நம்ம சரஸ்வதிய ஒக்கார வச்சி அவ கிட்ட பேசஆரம்பிச்சாரு..
சரஸ்வதி அப்போ கொஞ்சம் தெளிவா தான் இருந்தா.. அவ முன்னாடி அடிக்கடி யாரோ ஒரு பையன் தெரியறதா சொன்னா.. 25 வயசு இருக்குமாம்.. CITY பையன் மாறி இருக்கானாம்..இவ கிட்ட ஏதோ பேச வர மாறியே இருக்காம்.. கைல எப்பவாது கத்தி வச்சி இருப்பானாம்.. ரொம்போ பயப்படுவானாம்.. அவனையே குத்திக்கற மாறி பண்ணுவானாம்.. இதெல்லாம்நம்ம கோடாங்கி ரொம்ப கவனமா கேட்டுட்டு இருந்தாரு..
அடுத்த வாரத்துல பூஜ ஒன்னு வச்சிப்போம்-னு சரஸ்வதியோட அம்மா கிட்ட சொன்னாரு.. அப்பறம் அவங்க போய்டாங்க.. அந்த ஒரு வாரத்துல அடிக்கடி அந்த பையன் வரஆரம்பிச்சான்.. சரஸ்வதி ‘வேணாம் விட்டுடு.. ஐயோ அம்மா’ னு கத்துவா.. சில சமயம் ‘கொன்னுடு.. இப்டி சித்ரவத பண்ணாத’ னு கூட சொல்லுவா.. அவளால முடில பாவம் :'(
பூஜைக்கான நாள் வந்துச்சி.. கோடாங்கி சரஸ்வதிய ஒக்கார வச்சி உடுக்க எடுத்து அடிக்க ஆரம்பிச்சாரு(டும்டு-டும்டு-டுடும் டும்டு-டும்டு-டுடும்).. ஏதோ மந்தரம்-லா சொன்னாரு..அப்போ சரஸ்வதி மேல அந்த பையனோட ஆவி வந்துடுச்சி.. அந்த ஆவிய இவர் கட்டுப்பாட்டு-ல கொண்டு வந்தாரு.. அது கிட்ட கேள்வி கேக்க ஆரம்பிச்சாரு.. அந்த பையன் பேருராம்.. ஒரு பெரிய தொழிலதிபரோட பையன்.. காதல் திருமணம்.. நல்லா போயிட்டு இருந்த அவன் வாழ்க்கைல கல்யாணத்துக்கு அப்பறம் பல சங்கடங்கள்.. அதனால மனசு நொந்துதற்கொல முடிவுக்கு போய்ட்டான்.. ஆனா அவன் தற்கொல பண்றதுக்கு முன்னாடி ஒரு ACCIDENT-ல செத்து போய்ட்டான் (அட கண்ட்ராவியே :O).. அவன் செத்தத அவன் ஆவிஉணரல.. அவன் ஆவி தற்கொல பண்ணியே ஆகணும்-னு சுத்திட்டு இருந்துச்சி (AWESOMATIC STORY-ல??;)).. அத தான் நம்ம சரஸ்வதி இவ்ளோ பயப்பட காரணம்..
நம்ம கோடாங்கி இப்போ அவரு செய்ய வேண்டியத செய்ய ஆரம்பிச்சாரு.. மொதல்ல சரஸ்வதி மேல இருந்த அந்த ஆவிய எறங்க வெச்சாரு.. ஒரு ஒடம்புல ஆவிய செலுத்திகட்டுபடுத்தனும்-னு இல்ல.. எந்த உடலும் சம்மந்த படாம கூட ஆவியோட டப்பா DANCE ஆட வெக்கலாம்.. அந்த மாதிரி அந்த ஆவிய அந்தரத்துல ஆட்டி படைச்சாரு நம்மகோடாங்கி (இதுல-லாம் நம்ம கோடாங்கி PH.D).. அப்பறம் அந்த ஆவிய தற்கொல பண்ணிக்க தூண்டினாறு.. மந்தரங்கள் NONSTOP-ஆ வந்துட்டு இருந்துச்சி (அட.. அதே ஓம் க்ரீம்க்லீம் தாங்க).. கத்தியால அந்த ஆவி அதோட கழுத்த அறுத்துக்க TRY பண்ணிச்சி.. அதால முடில.. ரொம்ப கஷ்ட பட்டு கொஞ்ச நேரத்துக்கு அப்பறம் கழுத்த அறுத்துகிச்சி.. தன்னோடகாரியம் முடிஞ்சத நெனச்சி அந்த ஆவி நிம்மதியா போய்டிச்சி.. சரஸ்வதி மயக்கத்துல இருந்தா.. கோடாங்கி அவளோட அம்மா கிட்ட 'எதுக்கும் பயப்பட வேண்டாம்' னு சொல்லிஅனுப்பி வெச்சாரு..
இதோட கதை முடியுது..
சரி இதுக்கும் TITLE-க்கும் என்ன சம்மந்தம்-னு கேக்கறீங்களா..
சமீபத்துல ஜெனங்களின் ஏகோபித்த ஒகோபித்த ஆதரவோடு 3-னு ஒரு படம் வந்துச்சி.. படம் நெறைய பேருக்கு புடிக்கல.. ஆனா அந்த படத்த புடிச்ச மிக சில பேரு-ல அடியேனும்ஒருவன்.. அந்த படத்துல கதைக்கு கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாம நடுல நடுல ரெண்டு பச்ச கலர் ஜிங்குசாங்ஸ் வரும்.. அந்த ரெண்டு பச்ச ஜந்துக்கள் தான் நம்ம இந்த கதைலபாத்த கோடாங்கியும் சரஸ்வதியும்.. இதுல வந்த ஆவி தான் நம்ம தனுஷ்..
FLIP SIDE OF THE STORY.. BUHAHAHAHA :D :D
P.S: கழுவி கழுவி ஊத்த விரும்பும் நண்பர்கள் CONTROL பண்ணிக்கோங்கோ.. எவ்ளவோ தாங்கிட்டீங்க.. இத தாங்க மாட்டீங்களா??
NEXT’U MEET பண்றேன் !!