Monday 30 April 2012

ஆசை நோய்


நாம் பிறக்கும் போதே நம்மோடு பிறந்த TWIN தான் இந்த ஆசை..
பிறப்பு முதல் இறப்பு வரை போகாது இந்த ஆசை..
ஆசை படுவதும் கட்டணம் என்றால் வருமா இந்த ஆசை??
நம்மை பிடித்த மர்ம மாய நோய் தான் இந்த ஆசை..

தொட்டிலில் உதைக்கும் சிசு பருவத்தில் தன் 
அன்னையை கட்டி கொஞ்ச ஆசை..
துள்ளி ஓடும் குழந்தை பருவத்தில் 
உலகத்தை சுண்டு விரலில் நிறுத்த ஆசை..
உடைந்த இதயம் கொண்ட இளமை பருவத்தில்
அந்த கருவறையின் நிம்மதி வேண்டுமென ஆசை..
தோல் சுருங்கிய கிழ பருவத்தில் கல்லறைக்கு
தடங்கல் இல்லாத பாதை ஆசை..

ஆசைப்பட்டு ஆசைப்பட்டு வாழ்க்கையை
வாழ மறந்த கூட்டம் நாம்..
நமக்கு ஆசையை HOBBY-ஆக ஆக்கியதும் நம்மை
படைத்தவனின் ஒரு ஆசை தாம்..


- Poet’u Dhileepaa 8-)

No comments:

Post a Comment