வெள்ளி விழா தாண்டியும் வெற்றிகரமாய்
என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது..
என் கண்களாலே நான் பிடித்த உன்
புன்னகை படம்..
————–
இறந்து இறந்து
உயிர்த்தெழுகிறேன்.. உன்
தேன் சிந்தும் சிரிப்பை
காணும் போதெல்லாம்..
—————
என் பேனா முனையும்
பூப்பெய்தியது.. நான்
உன் பெயரை எழுதிய
அந்த நொடியில்..
—————
என் கண் இமைகள் செய்யுதடி
வேலை நிறுத்தம்.. உன்
அழகை கண்டு நான்
உறைந்து போனதினால்..
—————
உன்னை அன்று பார்த்தேன்
மவுண்ட் ரோட்டில்..
பார்த்தவுடன் மலர்ந்தது என் மனது..
பச்சை கொடிகாட்டியது
டிராபிக் சிக்னல்..
- Poet’u Dhileepaa 
unakkulla ivloo theramaya?? :O too gud ;)
ReplyDelete:)
Delete