சுற்றி சுழலும் இந்த பூமியில் நான் பிறந்தது
வரமா அல்லது சாபமா என்றேன்..
வரம் தானடா என்று என் இதயத்தில்
அறைந்தாள் அவள்..
கஷ்டங்கள் என்னை இறுக்கி கண்ணீரில்
என் கண்கள் நீந்திக்கொண்டிருக்கையில்
முட்கள் இல்லாமல் வனங்கள் இல்லையென்று
என் கண்ணீரை அகற்றினாள் அவள்..
எந்த பாதையில் சென்று என்
இலக்கை அடைவது என்றேன்..
என் காலடி தடங்களில் உன் காலை வைத்து வா..
இலக்கை அடைவாய் என்றவள் அவள்..
வெற்றியின் ஏணிப்படியில் வெகுவிரைவாய்
நான் ஏறிக் கொண்டிருக்கையில்
விழுவாய் என்று அச்சம் கொள்ளாதே..
விழுந்தால் தாங்க நான் இருக்கிறேன் என்றாள் அவள்..
வாழ்க்கையின் உச்சத்தை நான் அடைந்தேன்..
வெற்றிக்கனியை சுவைத்தேன்..
அந்த வெற்றியை சுமையாய் தலையில் ஏற்றாதே என்று
தலையில் குட்டு வைத்தாள் அவள்..
அவள்..
தன் உள்ளத்தில் சுமந்து என்னை ஈன்றவள்..
தன் குருதியை கொடுத்து என்னை வளர்த்தவள்..
அன்பை கற்பித்து நல்வழியை காட்டியவள்..
அவளுக்கு இல்லை இந்த ஞாலத்தில் ஒரு நகல்..
Migavum nanraaga irukkiradhu!! :) Keep blogging!! :)
ReplyDeletekandippa da :)
ReplyDelete:)
ReplyDelete