Thursday 21 June 2012

அன்பு அன்னை முதற்றே உலகு !!




உன் உள்ளங்கை ரேகையிலே
படுத்துறங்க ஆசை.. நீ
சிந்தும் முத்தத்திலே
மூழ்கி விட ஆசை..

—————

அன்னையை போல பாவமன்னிப்பு எந்த
பாதிரியாரும் தருவது இல்லை..
அன்னையை போல ஞானத்தை
எந்த போதிமரமும் தருவது இல்லை..

—————

இறந்த பிறகு தான் சொர்கத்தை
அடைய முடியுமா??
நான் பல முறை அடைந்து விட்டேனே..
நான் உறங்கும் என்
அன்னை மடி..

—————

உண்மையில் AMRUTANJAN கம்பெனிக்கு
கடுமையான போட்டி தலைவலியில்
என் தலை கோதும் என்
அன்னை விரல்கள் தான்..

—————

யாருடைய முதல் காதலும் தோற்பது இல்லை..
ஆம்.. எல்லோருக்கும்
அவர்களின் அன்னை  தான்
முதல் காதல்..

—————

என் அன்னையால் நான்
கண்ணீர் சிந்திய ஒரே தருணம்,
அவள் வெங்காயம் நறுக்கும் போது தான்..


No comments:

Post a Comment