Tuesday 12 June 2012

கவிதை கார்னர் – 10



நீ சிரிக்கும் ஓசைக்கு அந்த
ரஹ்மானும் இசை அமைக்க முடியாதடி..
இசைக்கே எப்படி இசை அமைப்பது??

—————

உனக்குள் நுழைய எவ்வளவோ முயல்கிறேன்..
ஆனால் உன் இதயத்திற்கு பக்கத்தில்
ஏன் நீ வைத்திருக்கிறாய்
NO ENTRY போர்டு..

—————

நீ அகங்காரத்தினால் கூறும்
வார்த்தைகள் கூட என்னை
ஆஹா’காரம் செய்ய
வைக்கின்றதே..

—————

நான் என் காதலை மழை போல்
பொழிந்தும் ஏன் நீ மெளனமாக
இருக்கிறாய்.. உன் இதயம் என்ன
MANMOHAN SINGH-ஆ?? ஏன் இந்த
MUTE MODE??

—————

படிக்கின்றேன் காதல் பட்டப்படிப்பு..
பிடித்த பாடம் அவள் விழி ஈர்ப்பியல்..
ஆனால் அவளிடம் காதலை
சொல்லும் VIVA-வில்
எப்போதும் ARREAR !!

—————

என் மனதினில் உன் நினைவுகள்
அள்ள அள்ள வருவதனால் என்
மனமும் ஒரு அக்ஷய பாத்திரமே..
அதை தூய்மையாக்கும் VIM BAR நீயே..


- Poet’u Dhileepaa  8-)

No comments:

Post a Comment