Thursday 3 May 2012

கவிதை கார்னர் – 3


உன்னை அழகை கடைந்து செய்தார்களா??
உன் சிரிப்பினை கடன் வாங்கி அதிலிருந்து அழகு
என்ற சொல்லை படைத்தார்களா??
விடை தெரியாமல் ஆடுகிறது என் மனம்
ஒரு பெண்டுலத்தை போல..

—————

விழி அம்புகளால் குறிபார்த்து என்
இதயத்தில் துளை போடும் உனக்கு
தாராளமாய் தரலாம்
ஒலிம்பிக் தங்கப்பதக்கம்..

—————

நீ சிணுங்கும் அந்த தருணத்திலே
தடுக்கி விழுந்தேனே உன்
குழி கன்னத்திலே..

—————

அன்று நீ கூறினாய்
ஹலோ எக்ஸ்க்யூஸ் மீ.. ஐயோ !!
பதிவு செய்யவில்லையே தவறவிட்டேன்
ஒரு ரிங்டோனை..

—————

தோட்டத்தில் நீ உலாவிய போது உன்னை
உரசியது அந்த காய்ந்த இலை..
அதற்க்கு வைக்கலாம் MADAME TUSSAUDS-ல்
ஒரு மெழுகு சிலை..

—————

பல ஆண்களின் மனதை
CLEAN BOWLED ஆக்கிய உனக்கு
கண்டிப்பாக தர வேண்டும்
அந்த PURPLE CAP..


- Poet’u Dhileepaa 8-)

No comments:

Post a Comment