Thursday 3 May 2012

கவிதை கார்னர் – 4


ஒளி பொங்கும் உன் விழியில்
ஏன் இத்தனை சோகம்?? உன்
கண்கள் என்ன தமிழகமா??
ஏன் அடிக்கடி மின்வெட்டு??

—————

ரோஜா இதழை என்றும்
முத்தம் இட்டு விடாதே.. தன்னை
விட மென்மை என்று
தற்கொலை செய்து கொள்ளும்..

—————

என்னிடம் கோபப்பட்டு என் மனதை
எரிய விடாதே.. அதனுள்
நீ இருக்கிறாய்.. ஆனால்
EMERGENCY EXIT இல்லை..

—————

உன்னை அழைத்து சென்றேன் என்
இரு சக்கர வாகனத்தில்.. அன்று
முதல் என் வண்டியும் உன்னை காதலிக்கிறது..
PULSAR – DEFINITELY MALE..

—————

நீ சூடிய மல்லிகை சரத்திலிருந்து
ஒரு பூ கீழே விழுந்தது.. கீழே விழுந்தது
அது செய்த பாவமா??
இல்லை உன் கூந்தலில் இதுவரை இடம் கிடைத்தது
அது செய்த புண்ணியமா?? என்னை
போலவே குழம்பி கிடக்கிறது
அந்த மல்லியும்..


- Poet’u Dhileepaa 8-)

No comments:

Post a Comment