Saturday 12 May 2012

கவிதை கார்னர் – 6


என் கண் முன்னே உன்
நாட்டிய அரங்கேற்றம்..
இன்னும் ஒரு முறை
சோம்பல் முறிப்பாயாக..

—————

உனக்கான என் அன்பு உனக்கு புரியாமலே போனது
அந்த டாக்டர்களின் கையெழுத்தை போல.. என்றாவது
அது உனக்கு தெளிவாக தெரியும்
கரும்பலகையில் வைத்த வெள்ளை புள்ளி போல..

—————

உன் கண்களாலே அடித்தாயே
ஒரு HELICOPTER SHOT..
பறந்தது பந்தல்ல..
என் மனது..

—————

உன்னாலே எரிந்து சாம்பலான
என் இதயம் மறுபடி பிறந்து
உன்னிடமே பறந்து வருகிறது.. ஒரு
PHEONIX பறவையை போல..

—————

நீ என்னை விட்டு பிரிந்து சென்ற
அந்த நொடியில் இறந்தது
என் இதயம்.. அரை கம்பத்தில் பறந்தது
நம் காதல் கொடி..



- Poet’u Dhileepaa 8-)

No comments:

Post a Comment