உன் புகைப்படம் ஒன்று கிடைக்குமா??
அந்த அன்னத்தின் ஆணவத்தை
அடக்கி விடுகிறேன்..
—————
என்னை கண்டும் காணாமல் நீ
செல்லும் போது சிக்கித்தவிக்கிறது
என் மனது.. அந்த
இடியாப்பத்தை போல..
—————
பொறாமையில் பொங்கி பொலிவு
மெல்ல மங்கி ஆயுள் தண்டனையை
அனுபவிக்கிறது.. நீ
முகம் பார்க்கும் உன்
வீட்டு கண்ணாடி..
—————
உன்னை பார்க்கவே கூடுதல் பிரகாசத்துடன்
தோன்றிய சூரியனை ஒரு
குடை பிடித்து ஏமாற்றி விடாதே..
சூரியன் அழுத சரித்திரம்
உண்டாகி விட போகிறது..
—————
PICASSO ஓவியத்திற்கு உயிர் ஊட்டி
பெயர் சூட்டி உலவ
விட்டிருக்கிறார்கள்.. என்னவள் போகும்
MORNING WALK..
- Poet’u Dhileepaa
No comments:
Post a Comment